Saturday, March 29, 2014

             இறைவன் 

நாம் வேண்டுவதை எல்லாம் கொடுப்பதில்லை
நமக்கு எது வேண்டுமோ அதைக் கொடுக்கிறான்-இறைவன்

கண்டுபிடிக்க முடியாத கண்ணாமூச்சி விளையாட்டு
கடவுளின் விளையாட்டு

வெற்றியில் நாம் சொந்தம் கொண்டாடிவிட்டு
தோல்வியில் அவனைத் தேடுவதில் நியாயமில்லை

மனிதனின் பிறப்பின் இரகசியம் ,இறப்பின் இரகசியம்
அறிவியல் அறியாது இறைவன்  அறிவான்

சிலருக்கு மாறி ,மாறி இன்பமும்  துன்பமும்
சிலருக்கோ ஒரு பாதி இன்பம்,மறு பாதி துன்பம்
இன்பமும் துன்பமும் அனைவருக்கும் சரிபாதி

இன்பத்தில் சிரிப்பு ,துன்பத்தில் அழுகை
சிரிப்பையும் ,அழுகையையும் தந்தவன் அவனே

இன்பம் நாம் செய்த புண்ணியம்
துன்பம் நாம் செய்த பாவம்

சொர்க்கமும் ,நரகமும் நம் மனம் தான்-அதில்
இறைவனை நினைத்திருந்தால் நிம்மதிதான்.











Thursday, March 6, 2014

                          குழந்தைகள் 


ஒரு குழந்தை  பிறக்கும் போது பூமியில்
ஒரு விண்மீன் முளைக்கிறது

ஒரு கோடி பூக்கள் ஈடாகுமா
ஒரு குழந்தையின் சிரிப்பிற்கு முன்னால்

எத்தனை மொழிகள் இருப்பினும்
ஏங்குவது என்னவோ குழந்தையின் மொழிக்கு

கணவன் -மனைவி சொல் மறைந்து
தந்தை -தாய் சொல் மலர்வது குழந்தையால்

இதுவரை வாழ்ந்தது வாழ்க்கை அல்ல
இனிதான் வாழ்க்கை என  உணர்த்துவது குழந்தை

எனினும்  என்னுள் எழும் கேள்விகள்
ஏன் இப்படியும் சில பெற்றோற்கள்

நாய்க்குட்டியை வீட்டில் வளர்த்தும்
பிள்ளையை விடுதியிலும் விடுகிறார்கள்

கல்வி முக்கியம் அதைவிட
குழந்தைகள் முக்கியம்  உணர்வதில்லை

இவர்கள் தாண்டாத உயரம்
பிள்ளைகள் தாண்ட ஏனோ நிர்பந்திக்கிறார்கள்

புத்தகங்கள் மட்டுமே அறிவு என
தவறான புரிதலில் தண்டிக்கிறார்கள்

சில அப்பாக்கள் ஏனோ
உயர் அதிகாரிகள் போல் உத்தரவிடுகிறார்கள்

குழந்தைகள் பாறைகள் அல்ல
உளி கொண்டு செதுக்குவதற்கு

அவர்கள் ஓவியங்கள்
தூரிகையால் வண்ணமிடுங்கள் .


      

Sunday, March 2, 2014

           எனக்கு மட்டுமே தெரிந்த வலி 


மூளை முந்திய நிகழ்வுகளில்
மூழ்கிப் போகிறது

முட்களில் நடந்து நடந்து
பூக்களில் நடக்கையிலும் இரத்தம் கசிகிறது

நினைவு தப்பிய நாட்களிலும்
அவ்வப்போது வந்து போயின
அந்த கருப்பு நாட்கள்

வாழ்க்கையின் பயணத்தில்
நெடுந்தூரம் பயணித்த பின்னும்
 பழைய நிகழ்வுகளிலேயே நிற்கிறது என் மனம்

இப்படி நடந்திருந்தால்
இப்படி நடக்காதிருந்திருந்தால்
என்ற போராட்டம்
என்னுள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது

வசந்த காலம்  வந்த பின்னும்
இவனுக்கு மட்டும் இலையுதிர் காலம்.



மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...