பார்வையாளன்
மேடையில் அமர்ந்தனர்
மேடையில் அமர்ந்தனர்
மேதாவிகள்-
அந்த
முக்கிய புள்ளிகள்
ஒருவரை ஒருவர்
முத்து முத்தாய் புகழ்ந்தனர்
ஒரே சால்வை
பல அவதாரம் எடுத்தது மேடையில்
உள்ளே பகை வைத்து
வெளியே புகழ்ந்த கதை அறியாது
கரவொலி எழுப்பி
களிப் புற்றான்
பார்வையாளன்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThank you.
DeleteHypocracy
ReplyDelete