Wednesday, February 5, 2014

              பார்வையாளன் 

மேடையில் அமர்ந்தனர்
மேதாவிகள்-
அந்த 
முக்கிய புள்ளிகள் 
ஒருவரை ஒருவர் 
முத்து முத்தாய் புகழ்ந்தனர் 
ஒரே சால்வை 
பல அவதாரம் எடுத்தது மேடையில் 
உள்ளே பகை வைத்து 
வெளியே புகழ்ந்த கதை அறியாது
கரவொலி எழுப்பி 
களிப் புற்றான்
பார்வையாளன். 


   

3 comments:

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...