மனிதாபிமானம்
என்
என்
இதயம் உடைத்து
இன்பம் கண்டவன்
என்
ஆயுள் ரேகை அழிக்க
ஆசை கொண்டவன்
என்
பகலை இருட்டாக்கி
விழிகளை பறித்துக்கொண்டவன்
என்னை
கர்ணன் என வர்ணனை செய்து
கைப்பொருளை களவாடியவன்
என்னை எனக்குள்
சிறை வைத்தவன்
துரோகம் இழைத்து என்
தூக்கம் கலைத்தவன்
எனினும்
என்னுள் இன்னமும்
மிச்சமிருக்கிறது
மனிதாபிமானம் .