Sunday, September 29, 2013

 உதிர்ந்த சொற்கள் 





உணவைக் குறையுங்கள்
கொழுப்பு குறையும் என்ற மருத்துவரிடம் 
ஒரு காலத்தில் உணவின்றி தவித்தவன் என்ற
 ஒரு சொல் 

மேடைப் பேச்சின் கைத்தட்டலிடையே நான் 
பணிவு காட்டாமல் உதிர்த்த 
ஒரு சொல் 

நேர்முகத்தேர்வில் தேர்வாகும் வேளையில் 
பதில் சொல்ல   வேண்டிய நான் கேள்வி கேட்ட
ஒரு சொல் 

விருந்துண்ட வேளையில் 
விருந்தளிப்போனிடம் 
உண்மையைச்  சொன்ன 
ஒரு சொல் 

விரும்பியதெல்லாம் வாங்கிக்கொடுத்து 
குழந்தைகள் முகம் வாடிப்போக வெளிப்பட்ட 
ஒரு சொல் 

உறவுகள்   உயிரென மதித்திட 
உணர்ச்சிவயப்பட்டு காயம் பட 
உரைத்திட்ட 
ஒரு சொல் 

மூளையில் உதித்த சொற்களை 
அப்படியே உதிர்த்து
சாயம் உதிர்ந்த  சுவரென சொற்கள்
தவிர்க்கமுடிவதில்லை . 
      

1 comment:

  1. உண்மைதான் கவிஞரே,
    நாம் பட்ட காயங்கள் நம்மை சில நேரங்களில் இப்படி பேச வைத்து விடுகின்றன. நம் கோபங்கள் சில நேரங்களில் கட்டுக்கடங்காமல் போவதன் விளைவுதான் இது போன்ற சில சொற்கள். எது எப்படியோ நாம் பேசிய சொற்கள் நம்மை சில சந்தர்பங்களில் இதுபோன்ற சிக்கலில் மாட்டிவைத்து விடுகின்றன. எனினும் நாம் பேசிய வார்த்தைகளுக்கு நாம் தானே பொறுப்பு.

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...