Friday, April 12, 2013

       வெறுமை 


மனம் வெற்றுத்தாளாய் படபடக்கிறது 
எண்ணங்களை எழுத்தில் வடிக்க இயலாமையால் 
ஏளனம் செய்கிறது என் பேனா 
வெறுமையில் தோய்ந்து போன மனதில் 
வாழ்க்கை மெல்ல ஊர்ந்து செல்கிறது 
வலி தாங்கவும் ,மகிழ்ச்சியில் திளைக்கவும் மனமின்றி 
கரை தெரியாத ஆழ் கடலில் மிதக்கிறேன் 
வெளிச்சம் ,இருள் இரண்டுமற்ற நிலையை நாடுகிறது 
உள்ளத்தில் உள்ளபடி சொன்னால் மிஞ்சுவது ஏளனம் 
யாரிடமும் குறையில்லை 
மதி மயங்கி நிற்கிறேன் 
விதி வழி செல்கிறேன் .

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...