Friday, February 22, 2013


மாவீரன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட மனக்குமுரலின் வெளிப்பாடு


அக்கினி குஞ்சினைக் கண்டு 
அஞ்சி நடுங்கிய கூட்டம் 

கொன்று குவித்தது 
கொடுங்கோலன் தலைமையில் 
கோழை எனப்பெயர் பெற்றது 

புலிகளின் வீர மரணம் மரியாதைக்குறியது 
பாலகனின் கொலை பரிதாபத்திர்க்குறியது

பட்டங்கள் பல பெற்று வாழ்ந்திருப்பான்
பாரினில் புகழ் பல வென்றிருப்பான்

என்னென்ன கனவுகள் கண்டிருப்பான்
எப்படியும் தமிழீழம் வென்றிருப்பான்

பூவை பொசிக்கிவிட்டு ஓலமிடுது அக்கூட்டம்
பூமியெங்கும் புறப்படும் தமிழ் போராளிகளைக் கண்டு
பயந்தோடும் அச்சிறு சிங்கள ராணுவ கூட்டம் .









Saturday, February 16, 2013

              எங்கே சென்றாள்?


ஆடையால் அழகை மூட 
ஆஹா அழகு கூட 
என்ன செய்வது எனத் தெரியாமல் அவளும் 
என்ன செய்வாள் என வியப்பதுமாய் நானும் 
நகர்ந்தன சில நிமிடங்கள் 

எனக்கு பிடிக்குமென அவள் உடையணிந்துவர 
அவளுக்கு பிடிக்குமென நான் உடையணிந்துவர 
நாங்கள் ரசித்தது உள்ளங்கள் என்ற உண்மை உணரவில்லை 

ஒரு புள்ளியில் பேச்சு திசைமாறுகையில் 
சட்டென அவள் இதழ்கள் மூட 
மூட வேண்டியது இதழ்கள் அல்ல இமைகள் என்றேன் 

இரு கரம் நீட்டி வாவென அழைக்க 
இத்தொடு நிற்காது இந்த விளையாட்டு என 
வெட்கத்தால் விலகிக்கொண்டவள் 

கன்னம் வருடும் கேசத்தின் மேல் கோபம் எனக்கு 
நான் முத்தமிடும் பகுதி ,எச்சரிக்கிறேன் விலகிச்செல்

யுகங்கள் கடந்த நம் நேசம் எந்த
முகங்கள் அறியும்

குறுகிய காலத்தில் நடந்த
நெடும் பயணம் நம் காதல்

விதைகளை வீசிவிட்டு
விதி வழி செல்வதெங்கே?

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...