Saturday, November 17, 2012

       தேவதையின் வருகை                


கங்காரு தன் குட்டியை சுமப்பதைப்போல் 
உன் நினைவினுடனே பயணிக்கிறேன் 

மனதை அழுத்தும் உன் நினைவுகளை 
உள்ளம் அழுதும் உணர்த்தமுடிவதில்லை 

எப்படிச் சொல்வது என் ஆழ் மனதின் இம்சையை 
ஏனெனில் நான் ஒரு அகிம்சைவாதி அல்லவா 

அர்த்தத்துடன் பேசின உன் கண்கள் 
அர்த்தமற்று பேசின உன் வார்த்தைகள் 

நீ வார்த்தையில் சிக்கிகொண்ட போதும் 
நான் வாய்ப்பை நழுவவிட்டவன் 

தொடும் தூரத்தில் நீ இருந்தாய் 
நாகரிகம் நாள் பார்த்தது 

நாள் பார்த்து, நாள் பார்த்து,நாள் கடந்து போனது 
நீ எனக்கில்லை என்றானது 

தேவதைக்கு தூது விடத்தெரியவில்லை எனக்கு 
நீ சொன்னாய் 'சொல்லியிருந்தால் உன் வாசல் வந்திருப்பேன் '

கை நழுவிய பொருள் கண்களில் வந்து போக 
இமைகள் மூட மறுக்கும் 

மனம் மெல்ல மறக்கும் அதற்குள் 
மரணம் வந்து போகும் மீண்டும் மறு ஜென்மம் எடுக்கும் . 

Tuesday, November 13, 2012

                   விடியல் 



சூரியன்  ஒளிந்துகொள்ளப்போகிறான் 
மலைமுகட்டின் மங்கலான வெளிச்சத்தில் 
கிளைபரப்பி நிற்கிறான் 
இன்னும் சற்று நேரத்தில்இரவு  தொடங்கிவிடும்
முன்பெல்லாம் நிலாவையும்  நட்சத்திரங்களையும்  
ரசித்த கண்கள் சலித்துப் போகின்றன 
நொடிகள் நத்தை என நகர மணித்துளிகள் 
யுகங்கலென காட்சியளிக்க 
சகித்துக்கொள்ள இயலவில்லை 
எத்தனை நேரம் தான் 
உறக்கம் வராத முன்னிரவிலோ அல்லது 
உறக்கம் கலைந்த பின்னிரவிலோ விழித்திருப்பது 
கண்களில் அயர்ச்சி ,தனிமை 
பயமுறுத்தும் இருள் தாங்கமுடிவதில்லை 
அடுத்தநாள் விடியலைக்கான 
ஆவலுடன் காத்திருக்கிறேன் .

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...