தேவதையின் வருகை
கங்காரு தன் குட்டியை சுமப்பதைப்போல்
உன் நினைவினுடனே பயணிக்கிறேன்
மனதை அழுத்தும் உன் நினைவுகளை
உள்ளம் அழுதும் உணர்த்தமுடிவதில்லை
எப்படிச் சொல்வது என் ஆழ் மனதின் இம்சையை
ஏனெனில் நான் ஒரு அகிம்சைவாதி அல்லவா
அர்த்தத்துடன் பேசின உன் கண்கள்
அர்த்தமற்று பேசின உன் வார்த்தைகள்
நீ வார்த்தையில் சிக்கிகொண்ட போதும்
நான் வாய்ப்பை நழுவவிட்டவன்
தொடும் தூரத்தில் நீ இருந்தாய்
நாகரிகம் நாள் பார்த்தது
நாள் பார்த்து, நாள் பார்த்து,நாள் கடந்து போனது
நீ எனக்கில்லை என்றானது
தேவதைக்கு தூது விடத்தெரியவில்லை எனக்கு
நீ சொன்னாய் 'சொல்லியிருந்தால் உன் வாசல் வந்திருப்பேன் '
கை நழுவிய பொருள் கண்களில் வந்து போக
இமைகள் மூட மறுக்கும்
மனம் மெல்ல மறக்கும் அதற்குள்
மரணம் வந்து போகும் மீண்டும் மறு ஜென்மம் எடுக்கும் .