Thursday, September 27, 2012

வாருங்கள் கவிஞர்களே 





கார்கூந்தல் ,நெற்றி கேசம்
வில்லெனபுருவம்
மீன் விழி ,ஓரப்பார்வை
உதட்டுச்சுவை
சங்கு கழுத்து
மேகம் தழுவும் சேலை என ...
பிடி இடை
பாதச்சுவடு
புகழ்ந்தது போதும் கவிஞர்களே
வாருங்கள் கொஞ்சம்
வறுமையின் பக்கம்
பிளாஸ்டிக் பாட்டில் பொருக்குபவன்
எடைக்கு பேப்பர் வாங்குபவன்
சில்லறை வர்த்தகத்தில்
அந்நிய முதலீடு அறியாத
அரை கிலோ நெல்லிக்காய் ,ஐந்து எலுமிச்சை
நான்கு கீரைக்கட்டு விற்கும் பாட்டியின்
100 ரூபாய் முதலீட்டில் என்ன லாபம் ?
கொஞ்சம் வேடிக்கையான பட்டாசு
அதிகம் வினையான பட்டாசு
சாயப்பட்டறையில் சாயம் போன வாழ்க்கை
எந்திரத்தோடு எந்திரமாய் மாறிப்போன தொழிலாளர்கள்
உச்சிவேளை வந்தால் மட்டுமே
வேலை நேரம் முடியும் உழவர்கள்
பட்டினி பொறுக்காத குழந்தையின் அழுகை இவைகளைப்பற்றி
கொஞ்சமாவது நாமும் கவலை கொள்வோம் கவிஞர்களே .

Tuesday, September 18, 2012


         மௌனமாய் கொன்றவள் 
(என் மனைவி மௌனமாய் இருந்தால் என் மீது கோபம் கொண்டிருக்கிறாள் என்று அர்த்தம் .அப்படி ஒரு தருணத்தில் அவளுக்காக நான் எழுதிய கவிதை )



இப்போதெல்லாம் கோபத்தால்
ஒரு பாறையைப்போல்
இறுகிக்கொண்டிருக்கிறது
உன் முகம்

இலையுதிர் காலம் முடிந்தால்
வசந்தகாலம்
உன் ஊடல் முடிந்தால்
வசந்தம் வருமென காத்திருக்கிறேன்

உன் மனக்குறை சொல்லிவிடு
பகிர்தல் தீர்வின் முதல் படி

ஒவ்வொரு மௌன யுத்தத்திர்க்குப்பின்னும்
சத்தியம் செய்கிறாய்
 "சண்டையிடமாட்டேன்"
எனக்கு தெரியும்
சமாதானக்கொடியை
பத்திரமாக வைத்திருக்கிறேன்

தயவு செய்து
கோபப்படு அல்லது
அழுதுவிடு
சண்டையிடு அல்லது
சாபமிடு

மலரினும் மெல்லியது என் மனம்
தாங்காது  உன்    மௌனம்.
   

Friday, September 14, 2012

      
       ஒரு மகனின் ஏக்கம்



தாயே எனக்கு நீ
தாய்ப்பால் கொடுத்ததில்லை
தாலாட்டு பாடியதில்லை
உன் மடியில் உறங்கியதில்லை
என் பிஞ்சு விரல் உன் சேலை பற்றியதில்லை
தலை கோதிவிட்டதில்லை
தமிழ் சொல்லி தந்ததில்லை
அறு  சுவை உணவை ஊட்டியதில்லை
அம்மா என்று அழுததோடு சரி
அம்மா என்று அழைத்ததில்லை
எப்படி முடியும்
என்னைப்  புறந்தள்ள
இறந்தவள் அல்லவா நீ  

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...