Monday, August 27, 2012

  அம்மா



அம்மா   நான்
அழகா
அலங்கோலமா
குருடா,செவிடா
அறியாமல்
கருப்பையில்
தாங்கிக்கொண்டாய்

நான்
பிறந்தபோது
பிரபஞ்சம்
பார்க்கவில்லை
என் சுவாசம் உணரவில்லை
உன்  வாசம் மட்டுமே உணர்ந்தேன்

என் அழுகையில் தெரிந்துகொண்டாய்
பசியா! தாகமா!

என்
மழலைப்பேச்சை
மொழிபெயர்க்க தெரிந்தவள்
நீ மட்டுமே

பூவை
உலகம் ரசிக்கும்
இந்த தளிரை
ரசித்தவள் நீ

உன்னை
உருக்கி என்
உருவம் செய்தாய்
உன் அருமை
உணரச்செய்தாய் .

Saturday, August 18, 2012

காதலியைக்  கரம் பிடித்தேன்




இந்த பாலைவனம்
பூத்தது உன் நினைவால்

இந்த
துறவி
துறந்தது துறவு
அணிந்தது உன்
அன்பு

என்
விழித்திரையில்
எப்போதும் நீ
விழித்திருக்கிறாய்

ஒரு விமர்சகனை
நினைத்து   அல்லல் படும்
எழுத்தாளன் போல்
உன்னால்  கலங்கிப்போகிறேன்

காதலிக்கும் போது
திருமணம் வேண்டிநின்றோம்
திருமணத்திற்குப்பின்
காதலை யாசித்தோம்

திருமணத்திற்கு   முன்னும் பின்னும்
அதிகம் கோபித்துகொன்டவள்  நீ தான்

நாம் வசதியில் வாழ்ந்தவர்கள் அல்ல
வறுமையிலிருந்து மீண்டவர்கள்

என்னோடு சண்டையிட்டால்
மகிழ்வேன்
உன்னோடு சண்டையிட்டு கொள்கிறாய்

எனக்காக
அதிகம் இழந்தவள் நீ
உனக்காக
எல்லாம் இழந்தவன் நான் .

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...