Saturday, November 26, 2011

பூமியை வாழவிடு

                                   பூமியை வாழவிடு 





மண்ணும் மரமும்
மழையும் மகத்தானவை
மனிதன் நன்றி
மறந்தவன்.

மனிதன்
மண்ணைச் சுரண்டினான்
மலையைச் சிதைத்தான்
கோபப்படாத பூமிக்கு
கொடுமையைத் தந்தவன்

பூக்களும் காய்களும்
கனிகளும் தந்த
பூமிக்கு
வெறும் காயங்களைத்
தந்தவன் மனிதன்

மண்ணில் பல வகை உண்டு
மனிதனில் பல வகை உண்டு
மண் நல்லவை

மனிதன் நன்றி மறந்தவன்
மண்ணுக்கு வாசனை உண்டு
மனிதனுக்கும் வாசனை உண்டு
மண்வாசனை மட்டும்
நுகரதக்கவை

நீ
வாழவேண்டுமா முதலில்
பூமியை
வாழவிடு

Tuesday, November 15, 2011

தனிமை


தனிமை 


அந்த ஒற்றையடிப்பாதையில்
எத்தனையோ வளைவுகள்
அத்தனையும் காயங்கள்

நத்தை தன் கூடு சுமப்பது போல்
சுமக்க வேண்டி வருமோ என அஞ்சி
வழித்துணையை நாடியதில்லை நான்

எத்தனையோ வருடங்களை
கடந்த பின்னும்
என்னுள் சிறு துளியாய்
தங்கியுள்ளது என் தனிமை

மேகங்களின் நிழல்கள் என
சில நேரங்களில்
சோகங்களில்
கரைந்து போயிருக்கிறேன்

வெயில் நாட்களில்
மழை வேண்டியும்
மழை நாட்களில் வெயில்
வேண்டியும்
நான் நின்றதில்லை
கடவுள் கொடுத்ததை
மகிழ்ச்சியோ துன்பமோ
அப்படியே
அள்ளிக்கொண்டிருகிறேன்

எத்தனையோ
சுகங்களுக்குபின்னும்
என்னுள்
ஒளிந்துகொண்டிருக்கிறது
சோகமயமான
அந்த ஒற்றையடிப்பாதை .

Thursday, November 3, 2011


பெண்ணின்மனது



எந்த மொழியில்
எழுதப்பட்டது
பெண்ணின் மனது

இதழ்கள் மூட
இமைகள் பேசும்
கதைதான் என்ன

நீ
மெல்லினமா
வல்லினமா

உன் வெட்கம்
சொல்வது
அழகின்
உச்சமா

நீ
ஆடையை திருத்துகிறாய்
அழுக்கானது
என்
மனம்

என்
இழப்பின்
வலியை உணர்வதற்குள்
காதலை
சொல்லிவிடு.

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...