Thursday, July 7, 2011

தன்னை வியத்தல்


தன்னை வியத்தல் 






கண்ணாடியை
கொத்திச் செல்லும்
குருவிகள்
உணர்ந்ததில்லை
தன் அழகை

எறும்புகள்
என்றும்
உணர்ந்ததில்லை
தன்
அழகான
அணிவகுப்பை

பூக்களின்
நிறமும், மணமும்
அழகை
யார் சொல்லி
பூக்களிடம்
புரிய வைப்பது

சுற்றும் பூமி
சற்றே நின்று போனால்
என்னவாகும் என்பைதை
பூமி அறிந்ததில்லை

உன்
அக
அழகை
கனவுகளும்
புற
அழகை
கண்ணாடியும்
காட்டும் போது
தன்னையே வியந்துகொள்

1 comment:

  1. எப்படி சொல்வது என்று தெரியவில்லை கவிஞரே!

    எறும்புகள் பற்றி நீவிர் அறிந்து செதுக்கி இருக்கும் இந்த வைர வரிகள்
    மிகவும் அருமை.
    வாழ்க நீ பல்லாண்டு.
    அன்புடன்
    செந்தில் குமார்

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...