Saturday, November 20, 2010

பிரிவு






பிரிவு
ஒரு விபத்தைப் போலவும்
காற்றாடியின் நூல்
பட்டென்று
அறுவதைப் போலவும்
நிகழ்ந்து விடுகிறது.

முந்தைய
நிகழ்வின்
நினைவுகள்
நிழலாய் தொடர்ந்து
வாட்டுகிறது.

பிரிவு ஏற்படாதவாறு
சாத்தியக் கூறுகள்
இருப்பினும்
நிகழ்ந்தே விடுகிறது
பிரிவு

மீண்டும் பழையபடி
தொடங்க இருப்பினும்
கைகளும்
கால்களும்
கட்டப்பட்டு
பிரிவிலேயே
வாழும் படியாகிறது.

பிடித்தோ
பிடிக்காமலோ
நிகழ்வது பிரிவு

வாழ்வின் அடுத்த
கணத்தை
கணிக்க முடியாத
அறிவை
நொந்து கொண்டு
வாழும்
நடைபிணமாய்
மாற்றுகிறது
பிரிவு

மரணத்தை விட
கொடியது என்பதைத்
தவிர-பிரிவைப்பற்றி
வேறென்ன
சொல்ல.

குதிரை




தலைக்கு கீரீடம்
எனினும்
உந்தன் கால்களுக்கே
அவை

உந்தன் நடையில்
ராஜ கம்பீரம்
ஆயினும் உந்தன்
பார்வை கனிவுதான்

ஓடிக் களைத்ததாய்
ஒரு சொட்டு கண்ணீர்
உன்னிடமில்லை

முன்வைத்த காலை
பின் வைத்த
ஓர் இழி பிறப்பல்ல நீ

உந்தன்
பிடறி சிலிர்ப்பில்
பெருமிதம் கண்டோம்
நாங்களும்
சிலிர்த்துப் பார்த்தோம்
தோற்றுப் போனோம்

நீ
படுத்து உறங்கி
நான்
பார்த்ததுமில்லை
தூக்கத்திற்கு கூட
இலக்கணம் வகுத்த
உந்தன் உழைப்பு
எனக்கு வியப்பு

நீ
சேணம் பூட்டியதற்காக
வருந்தியதில்லை
உந்தன் பார்வை
கூர்மைதான்

பந்தயம் கட்டியதற்காக
நீ ஓடவில்லை
இதை உணராமானிடரிடம்
கனைத்து சிரித்து பின்
கால் போன போக்கில்
நடப்பாய் இலக்கின்றி

ஆனாலும்
நீ கொடுத்தாய்
உன்னை எட்டுதல்
எனக்கோர் இலக்காய்

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...