Saturday, October 2, 2010

வாழத்தான் வேண்டும்.






சில நேரங்களில்
முத்துச் சிதறல்கள்
என் காலடியில்
கொட்டிக் கிடப்பதாய்
கனவு காண்பேன்
பல நேரங்களில்
சிப்பிகளுக்காக
அலைந்து திரிந்து
கொண்டிருக்கிறேன்.

இலக்கை எட்ட
இரவாய் பகலாய்
நாயாய் அலைவேன்
கோபுரத்தின் கலசம்
மட்டும் பாக்கி
கை கழுவிக் கொள்வேன்.

ஏனோ எல்லா நேரங்களிலும்
வாழ்க்கை தீர்ந்து போனதாய்
வாடிப்போகிறேன்

சில நேரங்களில்
நிழலாய் வந்த சோகம்
நிஜமாய் மிரட்டும்

எப்பொழுதாவது
பூமியைக் கேட்பேன்
எனக்காக மட்டும்
ஏன்? நீ சுற்றுகிறாய்

குளிருக்கும் கோடைக்கும் இடையே
வசந்தம் வருமே
என் வாழ்வில்
மட்டும் ஏன்
கோடையும் குளிரும்

நல்ல சட்டையில்
கறை விழுந்த மாதிரி
நிலவை மறைக்கும்
மேகம் எனக்குள்ளும் உண்டு.

வாளேந்துவேன்
களம் புகுவேன்
முதல் தலை உருண்டதும்
முகம் பொத்தி அழுவேன்.

வானம் பார்த்த பூமிதான்
என் வாழ்க்கை
வரவில்லா உறவுகள்
வரிசை வரிசையாய்
வங்கிக் கணக்கை
விசாரித்துபோகும்

நான் பூமி பார்த்து நடந்தால்
ஏதுமறியாதவன்
நேர்பார்வை பார்த்தால்
கர்வி

அள்ளிக்கொடுப்பேன்
சொல்லிக் கொள்ளாமல் போவான்

எப்பொழுதும் நடப்பேன்
சூரிய வெளிச்சத்தில்
எப்பொழுதும்
என்னுடன் வரும்
நிழல் சோகங்கள்.

காதலும்-கவிதையும்




நீ-என்
வகுப்பறைத் தோழி
ஆசையாய்த் தூண்டும்
அழகு நிலா

அடுத்த நாளே
உன் சிரிப்பையும்
நீ தீண்டாத
உன் தீண்டலையும்-எழுதி
கத்தையாய்
கவிதைகள்
கொடுத்தேன்
ரசிப்பாய் என
இருந்தேன்
சிரித்தாய்

ஒருமாலை
நேரத்தில்
முதலாளியிடம்
யாசகம்
கேட்கும்
ஒரு
தொழிலாளியைப் போல்
என் காதலைச்
சொன்னேன்
ஒரு தலையாட்டலில்
சரி என்றாய்


பிறகு
உறவு வேர்களும்
நட்புக் கிளைகளும்
வெட்டப்பட்ட
போன்சாய்
மரமானேன்

இன்னும்
சில நாட்களில்
மரபணு மாற்றப்பட்ட
பி.டி கத்தரிக்காய் ஆனேன்.

கடைசியாய்
ஒரு நாள்
நீ
என்ன செய்யப் போகிறாய்
என்றாய்

கவிஞன் என்றேன் நான்
சற்றே எரிச்சலுடன்
உன் தொழில்? என்றாய்
கவிதை என்றேன்

பிறகு
என்னை விட்டு
வெகுதூரம்
சென்று விட்டாய்
தனித்து விடப்பட்டோம்
நானும் என் கவிதையும்.

நீர்க்குமிழி









பேசிய வார்த்தைகளும்
பேசாத வார்த்தைகளும்
பேசிக் கொண்டன – இது
காதலின் ஒரு வகை
பற்றிக் கொள்ளுமோ என
பார்வையைத் தவிர்த்தல்
காதலின் புதுவகை
வார்த்தைகள் பரிமாறிக்
கொண்டோம்
சொல்லாமல் விடப்பட்டது
காதல்
நீ பார்வையால் பரிமாறினாய்
நான்
பசியாறினேன்.
காதல் ஒரு
நீர்குமிழி
கையில் ஏந்த முடியாமலும்
காற்றில் உடைந்து விடுமோ
என்ற அச்சத்திலும்
காத்திருக்கிறேன்.


மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...