Thursday, August 19, 2021

மனிதா நீ கொஞ்சம் மாறிவிடு



விலங்கு நடந்தால் காடு செழிக்கும்

மனிதன் நடந்தால் புற்கள் கூட மிஞ்சுவதுண்டா

வருமானத்து அதிகமான சொத்து சேர்த்த வழக்கு  எந்த விலங்கின் மீதாவது இதுவரை உண்டா

சிரித்துக்கொண்டே கழுத்தறுக்கும் மனிதருண்டு

சிரித்துக்கொண்டே கழுத்தை கடித்த சிங்கம் கேள்விப்பட்டதுண்டா

அடுத்த வேளை உணவுவரை விலங்குகள் வேட்டையாடுவதில்லை

அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து சொத்து சேர்க்காதா மனிதனுண்டா

தான் வாழும் காட்டை விலங்கு வாழ வைக்கும்

தான் வாழும் நிலத்தை மனிதன் வாழ வைத்தானா

குழந்தையை வெறுத்த மனிதனுண்டு

குட்டியை வெறுத்த விலங்குண்டா

விலங்கு நேரடியாக தாக்கும் மனிதரைப் போல் வலை பின்னி வீழ்த்துமா

அது கூட்டமாக கூடி வாழும் கூடி உண்ணும் 

மனிதன் கலவரம் தவிர மற்ற நேரங்களில் கூடியிருக்கிறானா


குதிரையை யானையை போருக்கு துணையாக அழைத்த மனிதா

அதன் வேட்டைக்கு துணையாய் என்றாவது உன்னை அழைத்ததுண்டா

நரிபோல தந்திரம் என்றானே

தந்திரம் செய்வது நரியின் குணமல்ல அது மனிதனின் குணம் அறிவோமா

மனிதா வாழ்க்கையைக் கொஞ்சம் விலங்கிடமிருந்தும் விளங்கிக்கொள்...


        

எல்லாம் நினைவிலிருக்கிறது

 



நான் இருக்கும் இடமெல்லாம்

நீ வந்தது


எதையாவது என்னிடமிருந்து கேட்டுப்பெற்றது

அவை என் நினைவின் சேகரிப்பு என நான் அறியாதது


ஆட்டோகிராபின் கடைசி பக்கத்தில் நீ எழுதியது

எடுத்துப்பார்க்க ஏதுவானது என நான் அறியாதது


நான் கோபமாய் பேசியது

நீ மௌனமாய் அழுதது


கடைசியாய் நான் உன்னை வழியனுப்பியது அப்போது நீ என்னை வாழ்த்தியது


எல்லாமே முற்றுப் பெறாத ஓவியமாய் முடிந்து போனது


சொற்களை வாரி இரைக்கும் இவளை நினைக்கையில்

 உன் மௌனம் நினைவில் வந்து போகும்


வாழ்வில் எப்போதாவது சந்தித்தால் கேட்கலாம் என்றிருக்கிறேன்

இது போல நீயும் நினைத்ததுண்டா


என்னைப் போல் அல்லாமல் வாழ்வோடு நீயாவது பொருந்திப்போனாயா?



                  

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...