Thursday, December 3, 2015

              யாரிடமாவது....

நீண்ட நேரமாக
அலைபேசியை
கையிலேயே வைத்திருக்கிறேன்
யாரிடமாவது பேசவேண்டும் 

அப்பாவிடம் பேசலாம்
அழத் தோன்றும் 

அண்ணனிடம் பேசலாம்
வார்த்தையில் விஷம் வைப்பான் 

நெருங்கிய நட்பு வட்டம்
"மக்கள்  அனையர் கயவர் "

அலுவலக நண்பர்
அடுத்த நாள் சந்திக்க வேண்டிய கத்தி பற்றி
தகவல் தருவார் 

தூரத்து நண்பன்
தொந்தரவாய் எண்ணுவான் 

என் ஊர் தோழன்
நான் வீழ்ந்த கதையை
நினைவுபடுத்துவான் 

அலைபேசியை
அணைத்துவிட்டு
உறக்கம் தொலையும்
இரவுக்காக காத்திருக்கிறேன் .

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...