கணித மேதை இராமானுஜன்
(கணித மேதை இ ராமானுஜனின் பிறந்தநாளை ஒட்டி எழுதிய கவிதை )
கடலில் பறந்த பறவையோ -நீ
கணித கடலை அளந்த மேதையோ
நோய்கள் வந்து போன பின்னும்
உள்ளம் நொந்து போனதில்லையோ
வறுமை வந்த போதும் -உன்
திறமை குறைந்ததில்லையோ
கல்லூரி மாணவன் ஐயம் தீர்க்க
பள்ளி மாணவன் நீ பயன்பட்டாயே
கணித மேதை கணக்கராய் ஆனபோது
உன் உள்ளம் அழுததோ அறியோமே
இங்கு உன்னைக் கொண்டாட யாருமில்லையோ
இங்கிலாந்திலிருந்து ஹார்டி வந்தாரோ
கேம்பிரிட்ஜ் மாணவன் ,F.R.S.பட்டம்
இதையும் தாண்டி இம்மண்ணின் மேல் பாசம்
காசநோய் எனும் காலன்
உறங்காத உன் ஆராய்ச்சிக்கு நீள் உறக்கம் தந்தனவோ .
(கணித மேதை இ ராமானுஜனின் பிறந்தநாளை ஒட்டி எழுதிய கவிதை )
கடலில் பறந்த பறவையோ -நீ
கணித கடலை அளந்த மேதையோ
நோய்கள் வந்து போன பின்னும்
உள்ளம் நொந்து போனதில்லையோ
வறுமை வந்த போதும் -உன்
திறமை குறைந்ததில்லையோ
கல்லூரி மாணவன் ஐயம் தீர்க்க
பள்ளி மாணவன் நீ பயன்பட்டாயே
கணித மேதை கணக்கராய் ஆனபோது
உன் உள்ளம் அழுததோ அறியோமே
இங்கு உன்னைக் கொண்டாட யாருமில்லையோ
இங்கிலாந்திலிருந்து ஹார்டி வந்தாரோ
கேம்பிரிட்ஜ் மாணவன் ,F.R.S.பட்டம்
இதையும் தாண்டி இம்மண்ணின் மேல் பாசம்
காசநோய் எனும் காலன்
உறங்காத உன் ஆராய்ச்சிக்கு நீள் உறக்கம் தந்தனவோ .