Tuesday, December 22, 2015

கணித மேதை இராமானுஜன் 
(கணித மேதை  இ ராமானுஜனின் பிறந்தநாளை ஒட்டி எழுதிய கவிதை )


கடலில் பறந்த பறவையோ -நீ

கணித கடலை அளந்த மேதையோ

நோய்கள் வந்து போன பின்னும்
உள்ளம் நொந்து போனதில்லையோ

வறுமை வந்த போதும் -உன்
திறமை குறைந்ததில்லையோ

கல்லூரி மாணவன் ஐயம் தீர்க்க 
பள்ளி மாணவன் நீ பயன்பட்டாயே

கணித மேதை கணக்கராய் ஆனபோது
உன் உள்ளம் அழுததோ அறியோமே

இங்கு உன்னைக் கொண்டாட யாருமில்லையோ
இங்கிலாந்திலிருந்து ஹார்டி வந்தாரோ

கேம்பிரிட்ஜ் மாணவன் ,F.R.S.பட்டம்
இதையும் தாண்டி இம்மண்ணின் மேல் பாசம்

காசநோய் எனும் காலன்
உறங்காத உன் ஆராய்ச்சிக்கு நீள் உறக்கம் தந்தனவோ .


Thursday, December 3, 2015

              யாரிடமாவது....

நீண்ட நேரமாக
அலைபேசியை
கையிலேயே வைத்திருக்கிறேன்
யாரிடமாவது பேசவேண்டும் 

அப்பாவிடம் பேசலாம்
அழத் தோன்றும் 

அண்ணனிடம் பேசலாம்
வார்த்தையில் விஷம் வைப்பான் 

நெருங்கிய நட்பு வட்டம்
"மக்கள்  அனையர் கயவர் "

அலுவலக நண்பர்
அடுத்த நாள் சந்திக்க வேண்டிய கத்தி பற்றி
தகவல் தருவார் 

தூரத்து நண்பன்
தொந்தரவாய் எண்ணுவான் 

என் ஊர் தோழன்
நான் வீழ்ந்த கதையை
நினைவுபடுத்துவான் 

அலைபேசியை
அணைத்துவிட்டு
உறக்கம் தொலையும்
இரவுக்காக காத்திருக்கிறேன் .

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...