கேள்விகள்
என்
வண்ணக் கனவுகளில்
கருப்பு மை பூசியது யாரோ
நேற்று வரை இருந்த உறவை
நினைத்து மகிழவேண்டியவை மறந்து தொலைவதும்
மறக்கவேண்டியவை மனதை அறுப்பதும் ஏனோ
நான் வகுத்த பாதை வேறு
பயணிக்கும் பாதை வேறானது எப்படி
ஊருக்கெல்லாம் தெரிஞ்ச சேதி
அவளுக்கு மட்டும் தெரியாம போனது எப்படி
நான் நேசிச்ச மண்ணு
என்னை ஏன் நிராகரிக்கணும்
எதுவும் இல்லாத போது வந்த தூக்கம்
எல்லாம் இருக்கும் போது
ஏன் வர மறுக்கணும்
இப்படி
விடையில்லா கேள்விகள்
எனக்குள் மட்டுமா
எல்லோருக்குள்ளும் உண்டா ?
என்
வண்ணக் கனவுகளில்
கருப்பு மை பூசியது யாரோ
நேற்று வரை இருந்த உறவை
நின்று போக செய்தது யாரோ
நினைத்து மகிழவேண்டியவை மறந்து தொலைவதும்
மறக்கவேண்டியவை மனதை அறுப்பதும் ஏனோ
நான் வகுத்த பாதை வேறு
பயணிக்கும் பாதை வேறானது எப்படி
ஊருக்கெல்லாம் தெரிஞ்ச சேதி
அவளுக்கு மட்டும் தெரியாம போனது எப்படி
நான் நேசிச்ச மண்ணு
என்னை ஏன் நிராகரிக்கணும்
எதுவும் இல்லாத போது வந்த தூக்கம்
எல்லாம் இருக்கும் போது
ஏன் வர மறுக்கணும்
இப்படி
விடையில்லா கேள்விகள்
எனக்குள் மட்டுமா
எல்லோருக்குள்ளும் உண்டா ?