Wednesday, June 12, 2013

  எனக்குன்னு ஒருவன் 


புது வளையல் வேண்டுமென்று 
உடையாத ரப்பர் வளையல் 
உடைச்ச கதை 

ஓலைக்குடிசையில 
ஒரு மழை பெய்தாலே 
ஒழுகாத பகுதி தேடி 
உட்கார்ந்து தூங்கியகதை 

பால் வித்த காசுல படிச்சு 
ஒரு வேளை  தேநீரும் 
ஊறுகாயில் ரசம் சோறும் 
உயிர் வளர்த்த கதை 

கல்லூரி காலத்தில் 
கலர் கலரா உடை அணியாம 
மூன்றே தாவணியில் 
மூன்றாண்டு முடிச்ச கதை 

வறுமையில வாழ்ந்ததில 
வாக்கப்பட முடியாதுன்னு 
பெத்தவங்க போதுமுன்னு 
நினைச்ச கதை 

அடிமனசில் ஒரு ஆசை 
அரசாங்க உத்தியோகம் 
அத்தனையும் சொல்லியழ 
அன்பான கணவன் 

இதெல்லாம் கிடைக்குமா 
இப்படியே முடிந்துபோகுமா 
என் வாழ்க்கை .

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...