வெறுமை
எண்ணங்களை எழுத்தில் வடிக்க இயலாமையால்
ஏளனம் செய்கிறது என் பேனா
வெறுமையில் தோய்ந்து போன மனதில்
வாழ்க்கை மெல்ல ஊர்ந்து செல்கிறது
வலி தாங்கவும் ,மகிழ்ச்சியில் திளைக்கவும் மனமின்றி
கரை தெரியாத ஆழ் கடலில் மிதக்கிறேன்
வெளிச்சம் ,இருள் இரண்டுமற்ற நிலையை நாடுகிறது
உள்ளத்தில் உள்ளபடி சொன்னால் மிஞ்சுவது ஏளனம்
யாரிடமும் குறையில்லை
மதி மயங்கி நிற்கிறேன்
விதி வழி செல்கிறேன் .