Wednesday, March 14, 2012

இயற்கை

இயற்கை 





புல்லாங்குழலுக்கு கட்டுப்படும் காற்று
உன் கைகளுக்குள் அகப்படுமா!

கடல்நீரை குடிநீராக்கும் அறிவியல்
மழையே நீ எங்கு
கற்றாய் என கேட்டதுண்டா !

மரங்களை சாய்த்துப் போடும் காற்று
நாணலிடம் காட்டும் கருணையை
நீ அறிந்ததுண்டா !

பூக்கள் பூப்பெய்தினால் அதன் வண்ணம்
என்ற உண்மையை உணர்ந்ததுண்டா !

மகரந்த சேர்க்கை நிகழ்த்தும்
வண்டுகளை நீ
வாழ்த்தியதுண்டா!

சூரியனும் சந்திரனும்
கண்ணாமூச்சி
ஆடும் அழகை
கண்டதுண்டா!

ஆகாயம் முழுக்க
அள்ளிதெளித்த
நட்சத்திரம் பற்றி
யாரிடமாவது
அதிசயத்ததுண்டா !

வீடு உன் உலகம் என்றால்
அர்த்தமற்றது உன் வாழ்க்கை
உலகம் உன் வீடு என்றால்
அர்த்தமுள்ளது உன் வாழ்க்கை .





2 comments:

  1. dear mullai,
    ippadi un kavithai mazhai adithaal naan
    eppadi kudai pidippen?
    Niciaiyamaai nanaipiren
    manam muzhuvathum
    magizhchiyil!
    Vaazhga nee pallaandu!

    Anbudan
    umadhu rasigan

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...