கவிஞன்
நிஜங்களில்
நிழலில்
கரைகிறான்.
தொலைந்துபோன
தோழியை
தேடுவதாய்
சொற்களுக்கிடையே
சிக்கிக்கொள்ளும்
வரியைத் தேடுகிறான் .
ஒரு
கருவைத் தாங்குவதைபோல்
சுகமானசுமைகளை
சுமக்கிறான்.
பொம்மையை
கட்டிக்கொண்டு
உறங்கும்
ஒரு மழலையைபோல்
தன் கவிதையின்
நினைவோடு
உறங்குகிறான் .
சுகமோ
துக்கமோ
நிகழ்காலத்தில்
எதிர்காலத்திற்காக
பதிவு செய்கிறான் .
வாழும்போது
பேசப்படாத
தன் கவிதை
வாழ்க்கைக்கு
பிறகாவது
பேசப்படுமா
என்ற
ஏக்கத்துடன்
எழுதுகிறான்
கவிஞன் .