Monday, July 26, 2010

என் உயிர் (ஊர்) தோழர்களே













என் ஊரின் தோழர்களே
தயவுசெய்து
என் எதிர் வராதீர்
வந்தால்
என்னிடம் ஏதும் தகவல்
சொல்லாதீர்

வகுப்பறை விட்டு ஓடி
வாய்க்காலும் நதியுமாய்
நான் திரிந்த கதை ஏராளம்

இன்னும் என்னென்னவோ
என் நெஞ்சில் வடுவாய்
வேண்டாம் தோழர்களே
என் எதிர் வராதீர்

என் வீடு
முற்றம், தோட்டம்
நான் அமரும் நிலைவாசல்
ஊர்ப் பெரிசுகள்
வந்து கதைபேசும்
திண்ணை
என நான்
வாழ்ந்த கதை சொல்லும்
என் ஊர்த் தோழர்களே

உங்களுக்காகச் சொல்கிறேன்
என் மனதில் ஓடுவதெல்லாம்
வீட்டை விற்று
வீழ்ந்த கதையும்
பஞ்சமாய்
பாண்டவர்கள் போல்
திரிந்த கதை
மட்டுமே

எனவே தோழர்களே
என் எதிர்
வராதீர்.




Wednesday, July 21, 2010

மனைவி





மனைவி ஊருக்குப் போயிருக்கிறாள்
இனி எனக்கென்ன கவலை
தற்காலிக விடுதலை
இனி இல்லை இல்லாள் தொல்லை
ஏன்? எப்படி? எதற்கு? போன்ற
தொலைத்தெடுக்கும்
தொல்லை கேள்விகள் இல்லை
நித்தம் ஓர் உணவு விடுதி
வகை வகையான உணவு
இஷ்டம் போல் எழலாம்
எட்டு மணிக்கு
கோயில் சாமி
கொடுமையும் இல்லை
கட்டுகள் அவிழ்க்கப்பட்ட
காளையாய்த் திரியலாம்
நினைத்த போது சினிமா
சத்தமாய் பாட்டு
வீடே அதிரும் படி
எம்பிக் குதிக்கலாம்
ஆனாலும்
அளவு தெரியாமல்
குறைத்துச் சாப்பிட்டதால்
அதிகாலைப் பசியில்
உருளும் போது
உள் மனசுக்கு மட்டும் தெரியும்
அவள்  இல்லா
வெறுமையும் வலியும்.

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...