அந்த நாளில்
என் மேல் கல்வீசியவன் மீது
ஒரு சொல் வீச முடிந்ததில்லை - அந்த நாளில்
விளையாட்டாய் சொன்ன சொற்களை
காத்திருந்து வலைபின்னி வீழ்த்தியவனை நினைக்கும் - அந்த நாளில்
இனிக்க இனிக்க பேசி எல்லாம் கைப்பற்றி
ஏளனம் செய்தவனை நினைக்கும் - அந்த நாளில்
குற்றம் சுமத்தப்பட்ட தருணத்தில்
திடீரென எதிரியாய் மாறிப்போன நண்பனை நினைக்கும் - அந்த நாளில்
எத்தனையோ துன்பம் கொடுத்தவனை
தூக்கிப்பிடித்திருக்கிறாயே ஏன்? என்ற வினா எழும் - அந்த நாளில்
சிறு சிறு தவறுகளைப் பொறுத்துக்கொண்டு
பெருந்தவறாய் மாறியதும் உறவை துண்டித்துக் கொண்டபின்
சிறு தவறில் சரிசெய்திருக்கலாமோ என என்னும் - அந்த நாளில்
இதுவரை வாழ்ந்த வாழ்வு வெற்றியா? தோல்வியா?
என்ற குழப்பம் வரும் - அந்த நாளில்
"உறக்கம் வருவதில்லை எனக்கு"
வாழ்வின் அர்த்தமென்ன?
வாழ்தல் மட்டுமே - அந்த நாளில்
"உறக்கம் வந்தது எனக்கு".
என் மேல் கல்வீசியவன் மீது
ஒரு சொல் வீச முடிந்ததில்லை - அந்த நாளில்
விளையாட்டாய் சொன்ன சொற்களை
காத்திருந்து வலைபின்னி வீழ்த்தியவனை நினைக்கும் - அந்த நாளில்
இனிக்க இனிக்க பேசி எல்லாம் கைப்பற்றி
ஏளனம் செய்தவனை நினைக்கும் - அந்த நாளில்
குற்றம் சுமத்தப்பட்ட தருணத்தில்
திடீரென எதிரியாய் மாறிப்போன நண்பனை நினைக்கும் - அந்த நாளில்
எத்தனையோ துன்பம் கொடுத்தவனை
தூக்கிப்பிடித்திருக்கிறாயே ஏன்? என்ற வினா எழும் - அந்த நாளில்
சிறு சிறு தவறுகளைப் பொறுத்துக்கொண்டு
பெருந்தவறாய் மாறியதும் உறவை துண்டித்துக் கொண்டபின்
சிறு தவறில் சரிசெய்திருக்கலாமோ என என்னும் - அந்த நாளில்
இதுவரை வாழ்ந்த வாழ்வு வெற்றியா? தோல்வியா?
என்ற குழப்பம் வரும் - அந்த நாளில்
"உறக்கம் வருவதில்லை எனக்கு"
வாழ்வின் அர்த்தமென்ன?
வாழ்தல் மட்டுமே - அந்த நாளில்
"உறக்கம் வந்தது எனக்கு".