Friday, November 27, 2015

      20 தேதிக்குப் பிறகு சம்பளக்காரன் .


மாதக்கடைசியில் வைக்கப்படும்
திருமண அழைப்பிதழ்
"29 ம் தேதி ஞாயிறு  தாங்க
கண்டிப்பா வந்துடுங்க "
29 ன்னு ஆனப்புறம்
எந்தக் கிழமையா இருந்தா என்னடா
என பொங்கும் கோபம் .

110 விதியின் கீழ் வெளியிடப்படும்
அறிக்கையைப் போல்  நீளும்
மனைவி வாசிக்கும் மளிகைப்  பட்டியல்
படிக்கிற காலத்துல அரியர் வச்சதால இந்த நிலை

இரண்டு மாதமா வராத அரியர்
இப்போதாவது வரக்கூடாத  எனற அல்ப ஆசை

மாத்திரை தீர்ந்திடிச்சு
டாக்டர பார்த்தா 1000 க்கு மருந்து எழுதுவாரு

அவரு பேமெண்ட் சீட்ல படிச்சாரோ,
என்னவோ என்ற சந்தேகம்

"ஏங்க கேஸ் தீர்ந்திடிச்சி "
ஏதோ காதிலே விழாத மாதிரி

தீவிர வாசகனாய் புத்தகத்தில்
மூழ்கிப்போவது

குழந்தைகள் பேயைப் பார்த்த மாதிரி
என்னைப் பார்த்து பயந்து ஒளியுது

இனி எந்த பே கமிஷன் வந்தால்
 இந்த  நிலை மாறுமா 

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...