Wednesday, September 10, 2014

                            நீ ...நான் ...




நீ வாரி இறைத்த சொற்களில்
என்னைத் தொட்டவை  சில
என்னைச் சுட்டவை சில

மகரந்த தேடல் மயக்கத்தில்
இதமாய் காற்றில் வீசும் என்னைத் தொட்ட சொற்கள்
மயக்கம் கலைகையில்
மெல்ல மேலெழும் என்னைச் சுட்ட சொற்கள்

 உன் புன்னகை நினைக்கையில்
இந்த பூமி எனதானது
உன் கோபம் நினைக்கையில்
பள்ளத்தாக்கின் விளிம்பில் பதியும் பாதம் எனதானது

மணிக்கணக்காய் பேசிய அன்பு
நிமிடங்களில் அர்த்தமற்ற ஊடலில் அழிந்தது

சந்திக்க காத்திருந்த நாட்களின் சுகம்
உன் தனிமை வேண்டுதலில் தகர்ந்துபோகிறது

எனக்குத்  தெரியும்
எரியும் தீயும் நீதான்
உருகும் மெழுகும் நீதான் .




மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...