பார்வையாளன்
மேடையில் அமர்ந்தனர்
மேடையில் அமர்ந்தனர்
மேதாவிகள்-
அந்த
முக்கிய புள்ளிகள்
ஒருவரை ஒருவர்
முத்து முத்தாய் புகழ்ந்தனர்
ஒரே சால்வை
பல அவதாரம் எடுத்தது மேடையில்
உள்ளே பகை வைத்து
வெளியே புகழ்ந்த கதை அறியாது
கரவொலி எழுப்பி
களிப் புற்றான்
பார்வையாளன்.