Friday, July 27, 2012

கவிதை




குழந்தையின்
கிறுக்கலில் ஒளிந்துகொண்டிருகிறது
அழகான ஓவியம்

அம்மாவின் அழகான
கோலத்தில்
மறைந்திருக்கிறது
 எரும்புத்தீனி

காதலியின் கண்களில்
கண்டுகொள்ள இயலாத
கள்ளத்தனம்

அலங்கரிக்கப்போவது எந்த
அழகியின் கூந்தல் எனகு
கவலைகொள்ளும்
ஒற்றைரோஜா


மலையைத் தழுவும் மேகம்
பெண்ணின் அழகை
மூடச்சொன்ன ரகசியம்

கடவுளுக்கு காணிக்கை
ஊமை ஒப்பந்தங்கள்

தேய்ந்து வளரும் நிலா
தினமும் வந்து போகும் சூரியன்     
இவற்றில் சிக்கித்தவிக்கிறது
எனக்கான  கவிதை .  

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...