Thursday, May 3, 2012

நண்பர்கள் சந்திப்பு

நண்பர்கள் சந்திப்பு 



பத்தாண்டுகள்
கழித்து
கண்டெடுத்தோம்
கல்லூரி காலத்திற்கு பிறகு
கலைந்து போன நண்பர்களை

நகரின் மையப் பகுதியில்
குளிர் சாதன அறையொன்றில்
சோமபானம் சுராபாணம் தவிர்த்த
சுகமான சந்திப்பு

பழைய முகம் தேடினோம்
அறிமுகபடுத்தும் அளவுக்கு
மாறிப்போன சில முகங்கள்
மார்க்கண்டேயனாய்
மாறாத சில முகங்கள்

கட்டிபிடித்தலும்
கண்ணீரில் கரைவதுமாய்
நகர்ந்தன
சில கணங்கள்

அளவற்ற பேச்சினால்
அன்பை பகிர்ந்தோம்

திரும்பி வருகையில்
காதில் ஒலித்துகொண்டே இருந்தது

பிள்ளை இல்லாத ஒரு
நண்பனின் புலம்பல்

வறுமையை ஒளித்து பேசிய ஒரு
நண்பனின் பேச்சு

நான்
காருக்கு
கட்ட வேண்டி
காத்திருக்கும்
தவணை
நினைவில் நிழலாடியது.

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...