Monday, April 30, 2012

உன்னோடு 


நீ பெண்பார்க்க வந்தது
நேற்று நடந்தது போல
நினைவில் வாட்டுது
தேக்கு மரமென நீ இருக்க

சந்தன மரமென நான் மணக்க
உன் ஒற்றை பார்வையில
நான் பொத்துன்னு விழுந்தேன்

சந்தைக்கு வந்ததாய்
சாக்கு போக்கு சொல்லி
சந்திக்க வந்த ஒன்ன
சந்திக்க நான் மறுக்க

விருட்டுன்னு நீ நடக்க
வேதனையில் நான் அழுக

நாம
கல்யாணம் செய்த பின்னே
நான் மட்டும்
பொறந்த வீடு போகயில
சிறுக்கி எவளாவது விரித்த வலையில்
சிக்குவியோன்னு நான்
சீக்கிரமாய் வந்தகதை
சொல்லி சொல்லி
சிரித்தோமே

நண்டும் சிண்டுமாய்
நாலுபுள்ளபிறக்கையில
மண்ணுல தொலச்ச காச
மண்ணுல தேடுறது விவசாயம்னு
திசைக்கொன்னா படிக்க வச்ச

திடீர்னு நீட்டி படுத்த நீ
மீண்டும் எழலையே
சாவுல உன் சாவுநல்ல சாவு


மண்ணு தாங்கினாலும்
மகன் தாங்கலையே
இந்த உசுர கையில புடிச்சு
என்ன செய்ய போறேன்
உன்கூடவே வாரேன்.




மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...